சென்னை, ஜூன்27- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி யது.
பதட்டமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு ஒளிப்படக்கருவி பொருத்தப்பட்டிருந்தது. இணையதள ஒளிப்படக்கருவி (வெப்கேமரா) மூலம் தேர்தல் அதிகாரி வாக்குப் பதிவைப் பார்வையிட்டார்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவப்படை வீரர்களும் எந்திரத் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
மாலை 4 மணி நிலவரப்படி 63.5 சதவீத வாக்கு பதிவானது.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் முடிவடைந்தது.
வரும் 30-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.