Home Featured நாடு ஐஎஸ் தொடர்புடைய சந்தேக நபர் அம்பாங்கில் கைது!

ஐஎஸ் தொடர்புடைய சந்தேக நபர் அம்பாங்கில் கைது!

696
0
SHARE
Ad

Khalid abu Bakarகோலாலம்பூர் – அம்பாங்கில் நேற்று ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், ஜெலாதேக் எல்ஆர்டி நிலையம் அருகே நேற்று புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்புக் குழு அந்நபரைக் கைது செய்தது என்று தெரிவித்துள்ளார்.

அந்நபரிடமிருந்து ஆயுதங்களும், ஐஎஸ் தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் காலிட் இன்று தனது டுவிட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice