Home Featured தமிழ் நாடு ‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் – வைரமுத்து கண்டனம்!

‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் – வைரமுத்து கண்டனம்!

609
0
SHARE
Ad

vairamuthu_2007064gசென்னை – பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் போது விரலில் அழியாத மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று புதன்கிழமை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? ‘மை’ அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும், விரலிலும்” என்று தெரிவித்துள்ளார்.