Home Featured தமிழ் நாடு மெரினாவில் ஓபிஎஸ் – தீபா திடீர் சந்திப்பு!

மெரினாவில் ஓபிஎஸ் – தீபா திடீர் சந்திப்பு!

855
0
SHARE
Ad

Deepaசென்னை – மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனர்.

இருவரும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தானும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக-விற்கு இரு கரங்களாக இருந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று முதல் தனது அரசியல் பிரவேசம் தொடங்குவதாகவும் தீபா அறிவித்தார்.