Home Featured நாடு கிளந்தானில் இனி பொது இடத்தில் பகிரங்க பிரம்படி

கிளந்தானில் இனி பொது இடத்தில் பகிரங்க பிரம்படி

1327
0
SHARE
Ad

pas-kelantan-கோத்தாபாரு – இஸ்லாமியக் கட்சியான பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான் மாநிலத்தில் நேற்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இனி கிளந்தான் மாநிலத்தில் சில குற்றங்களுக்கு இஸ்லாமிய முறைப்படி பொது இடத்தில் வைத்து குற்றவாளிக்கு பகிரங்கமாகப் பிரம்படி வழங்கப்படும்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, இது நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற அறைகூவலும் எழுந்துள்ளது.

நேற்று கிளந்தான் மாநிலம் இந்தச் சட்டத்திருத்தங்களுக்கு அனுமதி வழங்கியது.

#TamilSchoolmychoice

சிறைக்குள் பிரம்படி கொடுக்கும் சட்டம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு குற்றவாளிக்கு பிரம்படியை சிறைக்குள் வழங்குவதா அல்லது பொது இடத்தில் பகிரங்கமாக வழங்குவதா என்ற முடிவை ஷாரியா நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.