Home Featured நாடு பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளி இணைக் கட்டடம் திறப்பு விழா!

பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளி இணைக் கட்டடம் திறப்பு விழா!

1229
0
SHARE
Ad

salak tinggit-additional building-opening-17072017 (5)சிப்பாங் – இங்குள்ள தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியின்  மறு சீரமைக்கப்பட்ட இணைக் கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் நேற்று திங்கட்கிழமை (17 ஜூலை 2017) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சுகாதார அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அவருடன் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் வருகை தந்தார்.

salak tinggit-additional building-opening-17072017 (4)டாக்டர் சுப்ராவை வரவேற்கும் சிப்பாங் பிரமுகர் முன்னாள் செனட்டர் டத்தோ வி.கே.செல்லப்பன்….

#TamilSchoolmychoice

சுமார் 250,000 ரிங்கிட் அரசாங்க உதவி நிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் இணைக் கட்டடச் சீரமைப்போடு, 4 புதிய வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், நூல் நிலையம், கலைக்கல்வி வகுப்பு, சிறிய மண்டபம் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பள்ளி 1947-ஆம் ஆண்டில் சிப்பாங் பூட்டான் தோட்டத்தில் 24 மாணவர்களுடன் தோற்றம் கண்ட நாட்டின் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும்.

salak tinggit-additional building-opening-17072017 (7)பல்வேறு காலகட்டங்களில் உருமாற்றங்களும், மேம்பாடுகளும் கண்ட இந்தப் பள்ளி பின்னர் சிலாங்கூர் மாநில அரசால் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு பின்னர் 1987-ஆம் ஆண்டில் பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியாக சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய புதிய நிலம், நிதி உதவி ஆகியவற்றின் துணை கொண்டு புதிய தோற்றம் கண்டது.

புதிய விமான நிலையம், அதைத் தொடர்ந்து பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் சுற்று வட்டாரங்களில் உருவாகத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து 2009-ஆம் ஆண்டில் சுமார் 300 மாணவர்களையும், 22 ஆசிரியர்களோடும் இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது.

salak tinggit-additional building-opening-17072017 (3)மாணவர்களின் திறனைப் பார்வையிடும் டாக்டர் சுப்ரா மற்றும் கமலநாதன், ஆசிரியர்கள்

இதனைத் தொடர்ந்து உயர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வசதிகளை விரிவாக்கும் பொருட்டு, தற்போது இந்த இணைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.