Home தேர்தல்-14 மக்கள் தீர்ப்பை ஏற்று புதிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: ஜோகூர் சுல்தான்

மக்கள் தீர்ப்பை ஏற்று புதிய அரசாங்கத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: ஜோகூர் சுல்தான்

4350
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – 14-வது பொதுத்தேர்தல் முடிவுகளின் படி மக்கள் தீர்ப்பை ஏற்று உடனடியாக தாமதிக்காமல் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் தமது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

“நீங்கள் மக்கள் குரலை ஏற்க வேண்டும். இதற்கு மேல், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த ஒரு தாமதமும் இருக்கக்கூடாது. எனவே உடனடியாக நேரத்தை வீணடிக்காமல் புதிய பிரதமரை பதவியேற்கச் செய்து அரசாங்கத்தை அமைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜோகூர் சுல்தான் கூறியிருக்கிறார்.

SULTAN JOHOR MAHU SUARA RAKYAT DIHORMATI

SULTAN JOHOR MAHU SUARA RAKYAT DIHORMATI – 10 Mei 2018#sultanjohor#royalpressoffice

Posted by Sultan Ibrahim Sultan Iskandar on Wednesday, May 9, 2018