Home இந்தியா வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து

வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து

884
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.10 நிலவரம்) வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அங்கு வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டதில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதையும் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அதிபர் ராம்நாத் கோவிந்த் இன்று இந்திய நேரப்படி மாலை 7.30 மணியளவில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை இரத்து செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தமிழ் நாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 18-ஆம் நடைபெறவிருந்த சூழ்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்பட்டது.