Home இந்தியா ஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் மரணம்!

ஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் மரணம்!

592
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த ஜூன் 3-ஆம் தேதி காணாமல் போன இந்தியாவின் ஏஎன் 32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படையின் ஏஎன் 32 விமானம் ஜுன் 3-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படை, இந்திய இராணுவம் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டன. ஒருவாரக் கால தேடுதலுக்குப் பிறகு அவ்விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து பயணம் செய்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியது.