Home கலை உலகம் ‘அருவி’ திரைப்பட இயக்குனரின் அடுத்தப் படைப்பு ‘வாழ்’!

‘அருவி’ திரைப்பட இயக்குனரின் அடுத்தப் படைப்பு ‘வாழ்’!

755
0
SHARE
Ad

சென்னை: சிவகார்த்திகேயன் புரொடாக்‌ஷன் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன.

அந்த வெற்றிகளைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படமாக ‘வாழ்’ என்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தினை அருவி திரைப்பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்க உள்ளார். இப்படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஷெல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வேலைகளை மேற்கொள்கிறார். நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.