Home இந்தியா மதுவிலக்குப் போராட்டம்: திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 2500  பேர் கைது!

மதுவிலக்குப் போராட்டம்: திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 2500  பேர் கைது!

520
0
SHARE
Ad

thiசென்னை, ஆகஸ்டு4- தமிழகத்தில் மது ஒழிப்புப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மதுக்கடைகளை அடைக்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட, மாநிலம் முழுவதும்  மறியலில் ஈடுபட்ட 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அவர்களைக் காவல்துறையினர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

 

 

Comments