”நாட்டில் மத சகிப்புத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. சமீபகால சம்பவங்களால் அச்சம் அடைந்துள்ள என் மனைவி, ‘நாம் இந்தியாவைவிட்டு வெளியேறி விடலாமா’ என்று கேட்கிறார். எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார்” என்று பொது மேடை ஒன்றில் அமீர்கான் கருத்து தெரிவிக்க அது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தனது டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர்கானிற்கு சிவசேனா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் தங்கி இருக்கும் விடுதியை முற்றுகையிட்ட அந்த அமைப்பினர், அமீர்கானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனால் அமீர்கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.