ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் வேல்ஸ் விளையாட்டாளர் பேல் தனக்குக் கிடைத்த ‘பிரி கிக்’ வகையான வாய்ப்பை கோலாக்கியதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்திலேயே வேல்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.
அதன் பின்னர் சுலோவாக்கியா ஒரு கோல் போட, அதனைத் தொடர்ந்து ஆட்டம் முடிய கடைசி ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது, வேல்ஸ் ஒரு கோல் போட்டு 2-1 என்ற நிலையில் முன்னுக்கு வந்தது.
சுலோவாக்கியாவுக்கு இந்த ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான பிரவேசம் என்பது வரலாற்றுபூர்வ நிகழ்வாகும். காரணம், சுதந்திரம் பெற்ற பின்னர், சுதந்திர நாடாக முதன் முறையாக சுலோவாக்கியா இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெறுகின்றது.