இந்நிலையில், உலகிலேயே புகாட்டி வெய்ரான் என்ற அதிவேகக் கார்களைக் பயன்படுத்துவதற்காக துபாய் காவல்துறைக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டிருக்கிறது.
எனினும், துபாய் அது போன்ற ஆடம்பரக் கார்களை குற்றவாளிகளை விரட்டிப் பிடிப்பதற்காகப் பயன்படுத்துவதில்லை. துபாய் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. துபாய் பணக்காரர்கள் தங்க முலாம் பூசிய கார்களில் செல்லும் போது, அந்நாட்டு காவல்துறை இது போன்ற ஆடம்பரக் கார்களில் சென்றால் தான் மரியாதை என்கிறது துபாய் அரசு.
இதற்கு முன்பு அதிவேக போலீஸ் கார்களை வைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த நாடு இத்தாலி. லம்போகினி காலார்டோ எல்பி560-4 இரக கார்களை காவல்துறைக்கு அளித்திருந்தது. அக்கார்கள் மணிக்கு 370 கிலோமீட்டர் (230 mph) வேகத்தில் செல்லக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.