Home Featured உலகம் ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா: அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி!

ஏவுகணைகளைப் பரிசோதித்தது வடகொரியா: அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி!

1021
0
SHARE
Ad

NorthKoreaசியோல் – பியோங்யாங்கிலிருந்து வடக்கே இன்று சனிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துப் பார்த்தது வடகொரியா.

வடகொரியாவின் இந்த செயல்பாடு, அமெரிக்காவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

“இன்று அதிகாலை பியோங்கன்னத்திலுள்ள புக்சாங் என்ற பகுதியில் வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணைகளை ஏவியது” என தென்கொரிய இராணுவம் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

 

 

 

Comments