நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு, காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்க தரிசனம் செய்ய பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 5 பெண்கள் உட்ப 7 பக்தர்கள் இறந்ததோடு, 21 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இராணுவத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
Comments