முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் தங்கையான இங் லக் மீது அரிசி விநியோகம் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரணைகள் முடிந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட இருந்தது.
சட்டத்தை மீறி, இங் லக் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதால், அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்து அந்த வழக்கின் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
முன்னாள் பிரதமரும் இங் லக்கின் மூத்த சகோதரருமான தக்சின் ஷினவத்ராவும், ஏற்கனவே தாய்லாந்து நாட்டிலிருந்து வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார்.