இத்திட்டத்தின் வழி மாணவர்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவை மேலும் மேலோங்கச் செய்யவும், புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்பு திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. அதை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் கடந்த 4 வருடங்களாக தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை வழிநடத்தி வருகின்றனர்.
இம்மாநிலம் போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளும் இப்போட்டிகளில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இப்போட்டிற்கு மைநாடி அறவாரியமும், இத்திட்டத்திற்கு SEDIC அமைப்பும் பேருதவிப் புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று ஏப்ரல் 21 (சனிக்கிழமை) டிஸ்டெட் காலேஜ், பினாங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.
அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார். பினாங்கு மாநிலத்தில் மட்டும் தான் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துக் கொண்டு இந்நிகழ்வை மேன்மேலும் சிறப்பு செய்தனர். அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவர் தனது நன்றியை தேரிவித்துக் கொண்டார். மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து சிறந்ததொரு பணியைச் செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்: