அதற்காக அவரைப் பாராட்டும் அதே வேளையில், 15 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே ஆறுமுகச்சாமியை அதே கம்பீரமான உடற்கட்டு, உடல்மொழி, இளமையான தோற்றம் என மீண்டும் திரையில் கொண்டு வந்து அசத்தியிருக்கும் விக்ரமையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
சாமி படத்தில் ஆறுமுகச்சாமியால் கொல்லப்பட்ட வில்லன் பெருமாள் பிச்சைக்கு இலங்கையில் ஒரு குடும்பம் இருந்தது என்பது போல் காட்டி அங்கிருந்து தொடங்குகிறது சாமி-2.
அதன்பின்னர் அடுத்தடுத்து விரியும் குழப்பமில்லாத, அழகான திரைக்கதையால் படம் இறுதிவரை விறுவிறுப்போடும், சுவாரசியத்தோடும், பரபரப்போடும் நகர்கிறது.
திரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வரியா ராஜேஷ் அவரது பங்குக்கு நிறைவாக செய்திருந்தாலும், நம்மால் திரிஷாவை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்னொரு கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தனது வழக்கமான துறுதுறுப்பான நடிப்பால் கவர்கிறார். இருந்தாலும், அவருக்கு தீனி போடும் அளவுக்கு படத்தில் இடமில்லை.


நகைச்சுவைக்கு சூரி. வழக்கம்போல் புதுடில்லியில் இந்தி தெரியாத மாமாவாக வந்து சிரிப்பூட்டுகிறார். இருந்தாலும், அதே பாணி நடிப்பு, உடல்மொழி என சூரி கொஞ்சம் போரடிக்க வைக்கிறார்.
அழகான தரமான ஒளிப்பதிவு. பிரியனின் கேமரா புதுடில்லி, திருநெல்வேலியின் தெருக்கள், பரந்து விரிந்த வயல்வெளிகள், இராஜஸ்தானின் பாலைவன மணப் பிரதேசம் என அத்தனை காட்சிகளையும் அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது.
சாமி படத்தின் அந்த கதாபாத்திரச் செதுக்கல் இரண்டாவது பாகத்தில் இல்லை என்பது ஒரு குறை.
மற்றபடி விக்ரம் – பாபி சிம்ஹா இடையிலான மோதல்களின் விறுவிறுப்பால் மட்டுமே படம் பார்க்கும்படி அமைந்திருக்கிறது.