அவசர தரையிறக்கத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாக ரஷ்ய புலனாய்வுக் குழு உறுதிபடுத்தியுள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 78 பேர் பயணம் செய்துள்ளனர். உள்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்கு சிரெமெத்தியூ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம், 40 நிமிடங்களில் அவசரமாக தரையிறங்கி உள்ளது.
மின்னல் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்துக்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியக் குற்றங்களுக்காக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
Comments