மலேசியாவின் மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களுக்கு மலேசிய இலக்கியப் பங்களிப்புக்காக இவ்வருடம் அவ்விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் ‘அக்கினி வளையங்கள்’ என்ற நாவலை தமிழக எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களும் வெளியிட விருது தொகையான 5000 ரிங்கிட் மற்றும் கேடயத்தை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் பீர்முகம்மதுவுக்கு வழங்கினார்.
வல்லினம் பதிப்பில் வந்த நான்கு நூல்கள் இந்த நவீன இலக்கிய முகாமில் வெளியீடு கண்டன. ஒவ்வொரு நூல் குறித்து தமிழக எழுத்தாளர்களின் விமர்சன உரையும் இடம்பெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த இலக்கிய ஆர்வலர்கள் இந்த முகாமில் கலந்து பலன் பெற்றனர்.
வல்லினம் விருது விழா நிகழ்ச்சியின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:

