பிரபல தொழில் வல்லுநர்களிடமிருந்து வணிக நுணுக்கங்களை கற்றுக் கொள்வதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்களை வெல்ல ஓர் அரிய வாய்ப்பைப் பங்கு பெறுபவர்கள் பெற முடியும்.
‘Power Up!’ வெபினாரைப் பற்றிய விவரங்கள் :
• வெபினாரின் போது, பங்கேற்பாளர்கள் புகழ்பெற்ற பேச்சாளர்களின் கருத்துகளைக் கேட்டறிவர். பேச்சாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:
o டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry, MAICCI) தலைமைச் செயலாளர்;
o கணேஷ் குணரத்னம், PwC-இன் இயக்குனர்; செயல்பாட்டு மூலதன நிர்வாகத்துறைத் தலைவர் (Working Capital Management Leader);
o பேராசிரியர் டாக்டர் காதர் இப்ரஹிம், தன்முனைப்பு பேச்சாளர்.
• கடினமான காலங்களிலும் தற்போதைய பொருளாதார நிலைப்பாட்டிலும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்புகளை வழங்குவதோடு ‘Power Up!’ பணக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம், மேலும் நெருக்கடியின் போது வணிகத்தை இயக்குவதற்கான நேர்மறையான சிந்தனையாற்றல்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றை சித்தரிக்கும்.
• இந்த வெபினாரின் கேள்வி-பதில் அங்கத்தில், கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இரண்டு, ஒரு மணி நேர நேர்காணல்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்: ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் இடம்பெறும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ‘விழுதுகள்’ போன்றவற்றில் தங்கள் வணிகத்தைப் பற்றி மேலும் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை பெறுவர். ராகா அறிவிப்பாளர், உதயா தொகுத்து வழங்கும் ‘Power Up!’ தமிழில் நடத்தப்படும்.
• பதிவு செய்ய மற்றும் ‘Power Up!’ பற்றிய மேல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.