உள்ளூரில் 1,308 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு சம்பவம் மட்டும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 64,485 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்னமும், 11,481 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாநிலம் வாரியான எண்ணிக்கை
இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது.