Home One Line P1 கொவிட்19: புதிய தொற்றுகள் 1,309 – மரணங்கள் 3

கொவிட்19: புதிய தொற்றுகள் 1,309 – மரணங்கள் 3

953
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,309 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,308 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே ஒரு சம்பவம் மட்டும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 64,485 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,333 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 52,647-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,481 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியான எண்ணிக்கை

மாநிலம் வாரியாக பதிவான கொவிட்-19 சம்பவங்களின்படி மிக அதிகமான சம்பவங்கள் கோலாலம்பூரில் பதிவாகியுள்ளன.

இன்று 3 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது.