3,733 தொற்றுகள் கடந்த ஒரு நாளில் பதிவாகி இருக்கின்றன.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 440,677 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 26-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்திருக்கிறது.
மொத்தமுள்ள 3,3733 தொற்றுகளில் 3,727 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 6 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,060 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 416 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 216 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
நாட்டிலேயே இரண்டாவது நிலையில் மிக அதிகமாக கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாக சரவாக் இருக்கிறது. இங்கு 454 தொற்றுகள் பதிவாயின.
அடுத்த நிலையில் 365 தொற்றுகளை ஜோகூர் மாநிலம் பதிவு செய்தது.
கோலாலம்பூர் 338 தொற்றுகளைப் பதிவு செய்தது.