Home நாடு கொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733

கொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733

911
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 3,500-க்கும் மேற்பட்டதாக இருந்தன.

3,733 தொற்றுகள் கடந்த ஒரு நாளில் பதிவாகி இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 440,677 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 26-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தமுள்ள 3,3733 தொற்றுகளில் 3,727 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.  6 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் மட்டும் 3,211 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 401,934 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,060 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 416 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 216 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,278 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது.

நாட்டிலேயே இரண்டாவது நிலையில் மிக அதிகமாக கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாக சரவாக் இருக்கிறது. இங்கு 454 தொற்றுகள் பதிவாயின.

அடுத்த நிலையில் 365 தொற்றுகளை ஜோகூர் மாநிலம் பதிவு செய்தது.

கோலாலம்பூர் 338 தொற்றுகளைப் பதிவு செய்தது.