இந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) காலை கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது.
அமெரிக்காவின் உதவிக்கு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொவிட் தொற்றுகளை எதிர்த்துப் போராட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்க ஜோ பைடன் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மலேசியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் 1 மில்லியன் தடுப்பூசிகள் அதில் ஒரு பகுதியாகும்.
ஜூலை மாதத்திற்குள்ளாக 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகளைப் பெறும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.