அங்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்புகளை இஸ்மாயில் சாப்ரி நேரில் பார்வையிட்டார்.
குனோங் ஜெராய் மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நிகழ்ந்த பாதிப்புகளுக்காக முதல் கட்டமாக 75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை இஸ்மாயில் சாப்ரி வழங்கினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 500 ரிங்கிட் வழங்கப்படுகிறது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்றும் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதற்கொண்டு மேற்கொள்ள இயற்கைவளம், சுற்றுச் சூழல் அமைச்சுக்கும் இஸ்மாயில் சாப்ரி உத்தரவிட்டார்.
குனோங் ஜெராய் மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு, சில மரண சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.