நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 78-ஆம் ஆண்டுப் பொதுப் பேரவையில் மலேசியாவின் சார்பில் இன்று அன்வார் உரை நிகழ்த்தவிருக்கிறார்.
அன்வாரைப் பொறுத்தவரை இந்த நாள் ஒரு வரலாற்று பூர்வ நாளாகும். காரணம் கடந்த 25 ஆண்டு காலமாக நாட்டின் பிரதமர் பதவியை அடைய கடுமையாக அரசியல் போராட்டம் நடத்திய அவர், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கலந்து கொள்ளும் முதல் ஐக்கிய நாடுகள் மன்ற பொது பேரவை கூட்டம் இதுவாகும்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணி அளவில் அன்வார் உரை நிகழ்த்த உள்ளார். அவரின் உரை நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பாகும்.
Comments