அவரின் நூல் ‘யாழின் மெளனமொழி’ கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி சிரம்பானில் வெளியீடு கண்டது. மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
மஇகா நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.
நெகிரி மாநில ம.இ.காவும், சமூக இலக்கியப் பொது இயக்கங்களும் இணைந்து இந்த புத்தக வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ம.இ.காவிற்கும், இந்திய சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கிற்கான நன்றிக் கடனாக நான் இதைப் பார்க்கிறேன்” என சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.