சைட் சாதிக்கிற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும், 10 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
சைட் சாதிக் உடனடியாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அசிஸ் இடைக்காலத்திற்கு மூடா கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். சைட் சாதிக் தலைமை இல்லாததால் – அவர் மீதான தண்டனை நீடிப்பதால் – மூடா கட்சி மீண்டும் இளைஞர்களிடையே செல்வாக்கையும் வரவேற்பையும் பெற முடியுமா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.
எனினும் சைட் சாதிக் மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்.
இதற்கிடையில் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சைட் சாதிக் மேல்முறையீட்டையும் சமர்ப்பித்துள்ளார்.
அரசு தரப்பு வாதங்களுக்கு எதிராக நியாயமான ஐயப்பாடுகளை எழுப்ப மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான 30 வயதான சைட் சாதிக் தவறி விட்டார் என்றும் நீதிபதி அசார் அப்துல் ஹாமிட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.