அந்தக் குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் அந்தப் பெண்ணைத் தேடுவதற்கு முக்குளிப்பு வீரர்கள் (டைவர்ஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் வழக்கமாக இன்று சனிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் சந்தைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்க முற்பட்டுள்ளதால், அங்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
8 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழியில் விழுந்தவர் 48 வயது பெண்மணியாவார். அவரின் பெயர் விஜயலெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றிய சாலையோரக் குழியில் அவர் தவறி விழுந்தார்.