சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழு தலைவர் நோ ஓமார் தான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதோடு, அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பாக வேலை செய்வதால் அவருக்கு எதிராக மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் அர்த்தமற்ற செய்திகளைக் கொண்டு பெரிது படுத்தப்பட்டதால் அந்த தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் நோ உத்துசான் இணையத்தளத்திற்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதோடு, அந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பெற்றோர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் சில அம்னோ தலைவர்கள் கூறுகின்றனர்.