பள்ளி ஒன்றின் வளாகத்தில் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் கட்டியணைத்துக் கொண்ட விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “அந்த இளவட்டங்களுக்கு வெட்கமே இல்லை” என்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களால் எளிதாகக் கவரப்பட்டு அதன் படி நடக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாணவர்களின் அது போன்ற செயல்களுக்கு பெற்றோர் வக்காலத்து வாங்கிக் கொண்டு அவர்கள் குழந்தைகள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அம்மாணவரின் தாய், மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், “அவர்கள் குழந்தைகள்.இதைப் பெரிது படுத்தக்கூடாது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: மாதிரி பள்ளி