நஸ்ரி முகமட் யூனுஸ் (வயது 29), சம்சுல் இஸ்கண்டார் யூஸ்ரே (வயது 38) மற்றும் கைரி அனுவார் அகமட் ஸைனுதீன் (வயது 36) ஆகிய மூவரும் இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
தடைசெய்யப்பட்ட இடத்தில் ஒன்று கூடிய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 4(2) ன் படி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்ததால், 2000 ரிங்கிட் சொந்த உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மேலாண்மைக்கும், விசாரணை வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியும் நடைபெறவிருப்பதாக நீதிமன்ற நீதிபதி மாட் கனி அப்துல்லா அறிவித்தார்.