ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் எதிர் தாக்குதல் நடத்தியது. பயங்கர மோதலில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே இருந்த ராஜிவ் காந்தி சிலையை, நேற்று காலை ஒரு மர்ம கும்பல் சேதப்படுத்தியது. சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள புவனேஸ்வரி திரையரங்கின் அருகே இருந்த ராஜிவ் காந்தி சிலையையும் உடைத்தது.
தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையம் அருகில் இருந்த ராஜிவ் காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து தகவல்
போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று, காங்கிரஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் உறுதியளித்த பிறகு, காங்கிரஸார் கலைந்து சென்றனர்.