அவருக்கு அண்மையில் வடசென்னை ரோட்டரி கிளப் ‘குளோபல் ஐகான்’ விருது வழங்கி கெளரவித்தது. அவரின் அனைத்துலக தலைமைத்துவ முன்னுதாரணம், ஆற்றல் காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
வட்டார ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளைத் தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என வடசென்னை ரோட்டரி சங்கம் அறிவித்தது.
கடந்த காலங்களில் வடசென்னை ரோட்டரி சங்கம் மேற்கொண்ட நற்பணிகளில் தனது பங்களிப்பை வழங்கிய சரவணனுக்கு நன்றி கூறும் விதத்திலும் இந்த விருது வழங்கப்படுவதாக வடசென்னை ரோட்டரி சங்கம் தெரிவித்தது.