இந்நிலையில் ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தியா, ரஷ்யா விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்படுகிறது என்றும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் பொருளாதாரத் தடைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது என்றும் இந்திய அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிராந்திய நாடுகளுடன் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும்,
பிரச்சனைக்கு சுமூகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கிரிமியா வாக்கெடுப்புக்கு இந்தியா ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.