Home உலகம் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு!

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடு இல்லை: அமெரிக்கா அறிவிப்பு!

430
0
SHARE
Ad

7FA3A5F1-C7F9-4391-9A4D-DB29B1FEA0F8_w640_r1_s_cx0_cy11_cw0வாஷிங்டன், மே 2 – இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாய் நிலவி வரும் காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. எனினும் இந்தியா விரும்பினால் அது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சிக்கு (பி-டி.வி.) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாப்பின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. நேரடி பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தை தீர்க்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. அதனால் அமெரிக்கா, அந்நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாது. இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகியவை அந்நாட்டை கவலையடையச் செய்துள்ளன. இதற்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா கருதுகின்றது.”

“பாகிஸ்தானில், நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்தக் கொள்கை (தீவிரவாதிகளை ஊக்குவித்தல்), தற்போது அந்த நாட்டுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும். அதுதான் பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடுகளின் நலனுக்கும் உகந்ததாகும். இதுபோல் பாகிஸ்தானின் பிற அண்டை நாடுகளும் தீவிரவாதத்தை ஒர் ஆயுதமாக பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இந்தியாவில் விரைவில் புதிய அரசு பதவியேற்கும் சூழல் நிலவுவதால், இதனை ஒரு வாய்ப்பாக கருதி, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்று ஜேம்ஸ் டாப்பின்ஸ் கூறியுள்ளார்.