இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா 52 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன், 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய ஷகிப் அல்ஹசன் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியளில் 4-வது இடத்தில் உள்ளது.