இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறியதாவது:-
“இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர் நவநீதம் பிள்ளை நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஐ.நா. குழுவினரின் விசாரணைக்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”
“இலங்கை அரசு தனது நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும்.”
“ஜனநாயகம், மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம், நீதி மற்றும் கடமை தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைகள் தொடர்பாக இலங்கை அரசுக்கு உதவ அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது” என்று மேரி ஹார்ஃப் கூறியுள்ளார்.