பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளியாகி உள்ள இந்த இயங்குதளம் மேக் கணினிகள் மீது பயனர்கள் மத்தியில் மீண்டும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு (WWDC2014)-ன் போது ஆப்பிள் நிறுவனம் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட்-ன் முதல் பதிவினை, பயனர்களுக்கான முன்னோட்டமாக வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற புதிய கருவிகள் அறிமுக விழாவின் போது ‘ஓஎஸ் எக்ஸ் 10.10 யோஸ்மைட்-ன் இறுதி பதிப்பு வெளியிடப்பட்டது.
அதே தருணத்தில் இதன் நேர்த்தியான வடிவமைப்பு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும். இந்த புதிய இயங்குதளத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேக், ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் ஒருங்கிணைந்து இயங்குவதற்கான புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது” என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஐஒஎஸ்-ல் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த புதிய இயங்குதளத்திலும் உள்ளன. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டு இயங்குதளங்களையும் தனித் தனியான ஒன்றாகவே கையாள்கின்றது. யோஸ்மைட் இயங்குதளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏர்ட்ராப்’ (AirDrop) எனும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
5.16ஜிபி சேமிப்பு அளவு கொண்ட இந்த இயங்குதளம், ஓஎஸ் எக்ஸ் 10.6.8 அல்லது அதற்கு முன் உள்ள பதிப்புகளுக்கு ஏற்றதாக இருக்கும். பயனர்கள் இந்த புதிய இயங்குதளத்தை மேக் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது.