இயல்பாகவே கோவைச் செடியில் ‘குளுக்கோஸ்-6 பாஸ்பேடஸ்’ என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வேதிப்பொருள் தான் கல்லீரலில் உற்பத்தியாகி, நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
கோவைப் பழத்தை உண்டால் பல் வலி கூட குறையுமாம். கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து புண்களுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
இருமல், நீரடைப்பு, சொறி சிரங்கு, புண் ஆகியவை குணமாகும். கோவைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். வாய்ப் புண்ணை போக்கும் தன்மை கோவைக்காய்க்கு உண்டு.