அரச மன்னிப்பு கோருவதற்குத் தேவையான ஆவணங்களை தயாரிக்குமாறு அன்வார் தனக்கு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று கூறிய ரஃபிசி, கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுவிசாரணை செய்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்று தெரிவித்தார்.
அன்வார் தான் ஒரு நிரபராதி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். எனவே அவர் அரச மன்னிப்பு கோரமாட்டார் என்று ரபிஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரும் மனுவை, நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் பிகேஆர் தலைவியும், அன்வாரின் மனைவியுமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா, அவரது இரண்டாவது மகள் நூருல் நுகா உள்ளிட்டோர் அளித்துள்ளனர்.