இந்த விபத்தில் காயம் அடைந்த 28 பேர் காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்த மெட்ரோ பாலிடன் போலீஸ் அதிகாரி நாராயன் சிங் கூறுகையில்;
“பேருந்து உருண்டதில் சம்பவ இடத்திலேயே 14 பயணிகள் மரணம் அடைந்தனர். மேலும் 3 பேர் காத்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இறந்தார்கள்” என்றார்.
நேற்று காலை 6.45 மணிக்கு விபத்து ஏற்பட்டது. காத்மாண்டுவில் உள்ள பசுபதி கோவிலுக்கு சென்று விட்டு வந்த போது 20 இந்திய பக்தர்கள் சென்ற அந்த பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் ஆவார்கள்.