Home இந்தியா ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துத்  திமுக இன்று மேல்முறையீடு செய்தது!

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துத்  திமுக இன்று மேல்முறையீடு செய்தது!

549
0
SHARE
Ad

jayalalitha-anbhazhakanபுதுடெல்லி, ஜூலை 6- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரைக் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டதை எதிர்த்து, திமுக உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

ஜெயலலிதா விடுதலையான தீர்ப்பில் பல குளறுபடிகள் இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு  வழக்கில் விடுதலையளித்து வழங்கப்பட்ட கர்நாடகா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் கணிதப் பிழைகள் உள்ளன. எனவே, இந்தத் தீர்ப்பிற்குத் தடை விதிக்க வேண்டும்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

“ஒரு வழக்கு எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாகப் பவானிசிங் நடந்து கொண்டார்” என்று நீதிமன்றமே அவரை விமர்சித்துள்ளது.

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகனுக்கு எழுத்துப்பூர்வ வாதத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் எங்கள் தரப்பு நியாயத்தை முறையாக எடுத்து வைக்க முடியவில்லை.

இதனால் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.