Home இந்தியா இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரி திருமாவளவன் கையெழுத்து இயக்கம்!

இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரி திருமாவளவன் கையெழுத்து இயக்கம்!

543
0
SHARE
Ad

thiriசென்னை, ஜூலை 12- இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், 2009ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்  கையெழுத்து இயக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர் ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்டனர்