Home உலகம் மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொன்றோம்: அமெரிக்க அரசின் முன்னாள் செயலர்!

மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொன்றோம்: அமெரிக்க அரசின் முன்னாள் செயலர்!

781
0
SHARE
Ad

???????????????????????அமெரிக்கா, ஜூலை 15- பாப் இசையின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன்.இவரது நடனம் உலகப் புகழ் பெற்றது. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் அகால மரணம் அடைந்தார்.

பின்னர், புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் உட்கொண்டதே இவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்தது.இம்மருந்தை அவருக்கு அதிகமாகக் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் கைது செய்யப்பட்டார்.அந்த டாக்டர் அளவுக்கு அதிகமான மருந்தைச் செலுத்தி மைக்கேல் ஜாக்சனைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் செயலர்( ஏஜெண்டு) ஒருவர் திடீரென, மைக்கேல் ஜாக்சனைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய மனக் கட்டுப்பாட்டுத் திட்டம் எம்.கே. அல்ட்ரா.

இந்த எம்.கே. அல்ட்ரா என்னும் திட்டம், தனது நச்சுக்கரத்தால் இசைத் துறையில்  கோலோச்சுவவர்களைக் கொன்று குவிக்கத் திட்டமிட்டது. அவ்வகையில் அத்திட்டத்தின் முதல் குறி மைக்கேல் ஜாக்சன்.

அதோடு, இல்லுமினாட்டி எனப்படுபவர்களும் நீண்ட காலம் மைக்கேல் ஜாக்சன் மீது தங்களது பார்வையை பதித்திருந்துள்ளனர்.அதற்குப் பகடைக் காயாகப் பயன்படுத்தப்பட்டவர் தான் டாக்டர் கன்ராடு முர்ரே.

தன்னைக் கொலை செய்ய ஒரு கும்பல் குறி வைத்து அலைவது மைக்கேல் ஜாக்சனுக்கு முன்பே எப்படியோ தெரிந்திருக்கிறது.

அவரது மரணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு தனது முன்னாள் மேலாளரைத் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியுள்ளார்.

இதனை நிரூபிக்கும் வகையில், மைக்கேல் ஜாக்சன், டயட்டர் வெய்ஸ்னருடன் இறுதியாகப் பேசிய உரையாடல் அடங்கிய தொலைபேசிப் பதிவு கிடைத்துள்ளது.

அதில் ஜாக்சன்  பேசியிருப்பதாவது:

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை,

சிலர் அடங்கிய ஒரு குழு இருக்கக் கூடும்.  அவர்கள் என்னை இங்கிருந்து அனுப்ப விரும்புகிறார்கள்.  இனியும் நான் இங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.  இது குறித்துத் தொலைபேசி வழியே என்னால் பேச முடியாது.  என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால்,இதனை நான் உளப்பூர்வமாக உணர்கிறேன்.  கடவுளுக்கே அது தெரியும்.

அவர்கள் என்னைத் துப்பாக்கியால் சுடலாம்; கத்தியால் குத்தலாம்; அல்லது என்னைக் குற்றவாளியாகச் சிக்க வைக்க முயற்சிக்கலாம்.

எனக்கு அதிக அளவில் மருந்துகளைக் கொடுத்துள்ளனர்.  அவர்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யக் கூடும்.  அது அரசாங்கம் இல்லை. அதனைத் தவிர்த்து வேறு ஒன்று உள்ளது. அது எந்தக் குழு என்று எனக்குத் தெரியவில்லை.அதுபற்றி  நான் கவலைப்படவும் இல்லை.அவர்கள் எனது உயிரை எடுத்து விடக் கூடும். இதுவரை எனது வாழ்க்கை குறித்து நான் கவனத்தில் கொள்ளக் கூட இல்லை.

எனது தேவதைகளான எனது குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று அதில் பேசியுள்ளார்.

அதன்பின்னர் அடையாளம் தெரியாத குரல் இடைமறிப்பதை அடுத்து அவர் மறைகிறார்.  அதற்கு அடுத்த நாள் ஜாக்சன் மரணமடைந்துவிட்டார்.

இந்த விவகாரத்தில் வேறு சில சக்திகளும் இருக்கின்றன என லட்டோவா ஜாக்சன் தொடர்ந்து கூறி வருகிறார்.

“டாக்டர் முர்ரே தவறான நபர்களிடம் சிக்கி உள்ளார்.  அவரைச் சிலர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களே ஜாக்சனைக் கொன்றிருக்க வேண்டும்” என்கிறார்.

ஆனால், அவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை.அவர்களை ‘இல்லுமினாட்டி’ என்கிறார்கள்.

ஒரு சமூகம் போன்று வேரூன்றியுள்ள அவர்கள் கடந்த 18வது நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகவும் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.  அவர்கள் மக்கள் தொகையைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த சக்தி வாய்ந்த அமைப்புகளை ஊடுருபவர்களாகவும் இருப்பதுடன், புதிய உலக வரிசையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைத்துப் பெரிய இசை அமைப்பாளர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று நம்பப்படுவதுடன் ஹாலிவுட் மீதும் தங்களது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

ஹீத் லெட்ஜர், கிறிஸ் பென் மற்றும் டேவிட் கார்டின் ஆகியோர் கொல்லப்பட்டதற்கும் அவர்களே பொறுப்பு என்றும் லட்டோவா ஜாக்சன் கூறுகிறார்.