இந்த பாதிப்புகளினால் விமானங்கள் தாமதம், அதன் பாகங்களில் தேய்மானங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் அபாயங்கள் போன்றவை ஏற்படுகின்றன என்றும் ஐரீன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விமானம் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டுள்ள ஐரீன், மிகப் பெரிய பாதிப்புகள் வருவதற்குள் மலேசிய அதிகாரிகள் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“விமான நிலையம் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் சில பகுதிகளில் மறுசீரமைப்பு செய்திருக்கிறது. ஆனால் நிரந்தரத் தீர்வு தேவை” என்றும் ஐரீன் தெரிவித்துள்ளார்.