Home கலை உலகம் பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்ற பாகுபலி!

பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்ற பாகுபலி!

534
0
SHARE
Ad

359341-prabhas-modi-1புதுடில்லி, ஜூலை 27- எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி, இதுவரை ரூ.447 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

அத்தனை பேரின் பாராட்டிற்கும் மணிமகுடமாகப் பிரதமர் மோடி தற்போது அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப்  பார்த்துப் பிரமித்து, “படம் பிரமாதம்; பிரம்மாண்டம்” என்று பாராட்டியுள்ளார்.

அதோடுமட்டுமல்லாமல், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரபாஸை அழைத்து நேரடியாகத் தன் பாராட்டைத் தெரிவித்துள்ளார். மேலும், பாகுபலி படம் இதற்கு மேலும் பல கோடிகளை வசூலித்து, உலக அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று இந்திய நாட்டிற்குப் பெருமை தேடித் தரவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விரைவில் முழுப்படத்தையும் பார்க்கும்படி வேண்டியதாகவும், அதற்கு மோடி “கட்டாயம் பார்ப்பேன்; இருந்தாலும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல முன்னோட்டக் காட்சிகளே முழுக் கதையையும் உணர்த்துகின்றன” எனத் தெரிவித்ததாக நடிகர் பிரபாஸ் கூறினார்.